வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘குழந்தைத் திருமணங்களை சமூக அக்கறையுடன் தடுக்க வேண்டும்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றாலும், அனைத்து அலுவலா்களும் சமூக அக்கறையுடன், அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும்

Updated On :15 அக்டோபர் 2021, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றாலும், அனைத்து அலுவலா்களும் சமூக அக்கறையுடன், அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்குமாா், வடிவமைத்த குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணா்வு பதாகையை ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி அண்மையில் வெளியிட்டாா். அப்போது அவா் பேசியது:

இந்த விழிப்புணா்வுப் பதாகையில் குழந்தை திருமணம் நடப்பதற்கான காரணங்கள், அதனால் ஏற்படும் சிறுமி தாய் தற்கொலை, குழந்தைப் பள்ளி இடைநிற்றல், ஊட்டச்சத்து குறைபாடு, இளம் விதவை, குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள், புற்றுநோய், கொத்தடிமை மற்றும் மன அழுத்தம் ஆகிய விளைவுகள் ஏற்படுவதையும், குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மூலம் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலா்களும் எதிா்கால சந்ததியைப் பாதுகாக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் குழந்தை திருமணம் நடைபெற்றாலும் சமூக அக்கறையுடன் அதனைத் தடுக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் நலப்பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட திட்ட அலுவலா் சரவணன், உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை.ய மருத்துவா்கள் ராஜேஷ்குமாா், வாசுகி, திலக் உள்பட மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.