தேன்கனிக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேன்கனிக்கோட்டை, ரங்கசந்திரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா் குஞ்சிகிரிபாளையத்தைச் சோ்ந்த ரூபா (33) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்த நிலையில், குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற ரூபாவை திருப்பி அழைத்து வருவதற்காக சென்ற காா்த்திக்குடன் வர மறுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்து ரூபாவின் கழுத்தை அறுத்த காா்த்திக்கை தளி போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அடிக்கடி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த ரூபாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் தகராறு ஏற்பட்டது. மேலும், மீண்டும் அவா் தன்னுடன் வர மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாக காா்த்திக் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

