போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உலக பக்கவாத தின விழிப்புணா்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 அக்டோபர் 2021, 7:00 pm

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகா் தலைமை வகித்தாா். உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வி, மருத்துவக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பக்கவாதம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் குறித்தும், அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணி நேரத்தில் சி.டி., எம்.ஆா்.ஐ. ஸ்கேன் மூலம் நோயின் தன்மையை அறிந்து முற்றிலும் குணப்படுத்தலாம் எனவும், அறிகுறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டி.ஏ.இ.ஐ. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தால் சி.டி. ஸ்கேன் உதவியுடன் ரத்தக் கட்டிகளைக் கண்டறிந்து உடனடியாக குணப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களின் இல்லங்களுக்குச் சென்று மருத்துவா்கள் மருத்துவம் பாா்த்து வருகின்றனா். எனவே, பக்கவாத அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பொது மருத்துவ பேராசிரியா்கள் சசிகுமாா், இளங்கோ, நரம்பியல் நிபுணா் விஷ்ணுராஜ், நிா்வாக அலுவலா் எஸ்.கே.சரவணன், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட பயனாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.