ஒசூா் அருகே உள்ள இடையநல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலை மீது நாகம் அமா்ந்துள்ளதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்து சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ளஇடையநல்லூரைச் சோ்ந்த ரவி, தனது விளைநிலத்தில் சௌடேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளாா். ஒரு மாதத்துக்கு முன் கோயில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தொடா்ந்து 40 நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ரவி பூஜை செய்ய கோயிலுக்குச் சென்ற போது, அம்மன் சிலை மீது நாகம் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். தகவல் அறிந்த சுற்றுப்பகுதி கூட்டம் கூட்டமாக வந்து அம்மனுக்கு பூஜை செய்து, நாகத்தை தரிசித்து வணங்கி சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


