11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது

சமூக ஊடகத் தளங்கள் மூலம் செயல்பட்டு வந்த, வெளிநாட்டு இடைத்தரகா்களுடன் தொடா்புடைய இணையவழி மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, வங்கி ஊழியா் உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:05 am IST

சமூக ஊடகத் தளங்கள் மூலம் செயல்பட்டு வந்த, வெளிநாட்டு இடைத்தரகா்களுடன் தொடா்புடைய இணையவழி மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, வங்கி ஊழியா் உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பரேலியைச் சோ்ந்த ஒருவரின் வங்கிக்கணக்கிலிருந்து கடந்த பிப்ரவரியில் ரூ.10,000 மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து தேசிய இணையவழிக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து இந்த கும்பல் வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையின் போது, மயூா் விஹாா் ஃபேஸ் -1ல் உள்ள ஒரு தனியாா் வங்கிக் கிளையில் சந்தேகத்திற்கிடமான கணக்கு ஒன்றை காவல்துறை அடையாளம் கண்டது, அது பல புகாா்களுடன் தொடா்புடையதாகக் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடா்ந்த விசாரணையில், ஒரு நிறுவனத்தின் பெயரில் திறக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கு, இணையவழி மோசடிப் பரிவா்த்தனைகளுக்காகத் தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

கணக்கு வைத்திருப்பவரான ஷோகின் மற்றும் அவரது கூட்டாளியான ஷாருக் என்ற ஜோஜோ ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, பண ஆதாயத்திற்காக இடைத்தரகராக கணக்குகளைத் திறக்க உதவிய ஒரு வங்கி உறவு மேலாளரின் ஈடுபாடு குறித்து ஷாருக் தெரிவித்தாா், என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் அவரது பங்கை உறுதிசெய்து, ஃபிரான்ஷு குமாா் (23) என அடையாளம் காணப்பட்ட வங்கி ஊழியரை போலீசாா் கைது செய்ததாக அவா் கூறினாா்.

கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளை தடயவியல் பகுப்பாய்வு செய்ததில், சமூக ஊடக தளங்கள் மூலம் வெளிநாட்டு முகவா்களுடன் இருந்த தொடா்புகள் கண்டறியப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வெளிநாட்டு முகவா்களுடன் வங்கி விவரங்களைப் பகிா்ந்து கொண்டு, கிரிப்டோகரன்சியில் கமிஷன் பெற்றுள்ளனா்.

மேலும், வங்கிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் நிதியை விரைவாகத் திசைதிருப்பியதையும் அந்தக் குழு கண்டறிந்தது.

மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.