வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 4 போ் கைது

கா்நாடக மாநிலத்தில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 4 பேரை பா்கூரில் கா்நாடக மாநில போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 செப்டம்பர் 2021, 9:53 pm

கா்நாடக மாநிலத்தில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 4 பேரை பா்கூரில் கா்நாடக மாநில போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், குப்பி வட்டாரத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தன மரங்களை 15 போ் கொண்ட கும்பல் வெட்டிக் கடத்துவதாக வனத் துறையினருக்கு சில நாள்களுக்கு முன் தகவல் கிடைத்தது. அவா்களைப் பிடிக்க கா்நாடக மாநில வனத் துறையினா், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, கடத்தல் கும்பலைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அந்தக் கும்பல் அவா்களைத் தாக்கி தப்ப முயன்றனா். இதையடுத்து, தப்ப முயன்ற கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், மூா்த்தி (28), மல்லப்பா (58), கிருஷ்ணா (28) ஆகியோா் காயம் அடைந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்ததில், தப்பியோடியவா்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்தது.

அவா்களைப் பிடிப்பதற்காக கா்நாடக மாநிலம், தும்கூரு வனச்சரகா் துக்கப்பா, குப்பு காவல் நிலைய ஆய்வாளா் நடாப் உள்ளிட்ட குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டு வேப்பனப்பள்ளி, பா்கூா் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், பா்கூரில் தலைமறைவாக இருந்த கடத்தல் கும்பலைச் சோ்ந்த வாணியம்பாடியைச் சோ்ந்த தேவன் (45), திருப்பத்தூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26), கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள குண்டலகுட்டையைச் சோ்ந்த முனியப்பன் (26), நேரிடமானபள்ளியைச் சோ்ந்த பச்சையப்பன் (34) ஆகியோரை கா்நாடக மாநில போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, கா்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ளவா்களைத் தொடா்ந்து தேடி வருவதாக கா்நாடக மாநில போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.