வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சூரிய சக்தியில் இயங்கும் பயணியா் நிழற்கூடம் செல்லக்குமாா் எம்.பி. திறந்துவைத்தாா்

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சூரிய சக்தியில் இயங்கும் பயணியா் நிழற்கூடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:24 pm

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சூரிய சக்தியில் இயங்கும் பயணியா் நிழற்கூடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சேலம் செல்லும் சாலையில் பயணியா் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் பாதிக்கப்பட்டு வந்தனா்.

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, அந்தப் பகுதியில் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் அதிநவீன சூரிய சக்தியில் இயங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த பயணியா் நிழற்கூடம் கட்டப்பட்டது.

பணிகள் முடிவுற்ற நிலையில் பயணியா் நிழற்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.பி. அ.செல்லக்குமாா் பங்கேற்று பயணியா் நிழற்கூடத்தைத் திறந்து வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

இங்கு கட்டப்பட்டுள்ள நிழற்கூடமானது சூரிய சக்தியில் இயங்கும் முதல் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்கூடமாகும்.

சூரிய சக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு இதில் இரவு முழுவதும் வெளிச்சம் ஒளிரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் தகவல் அறிந்துகொள்ளும் வகையில் டிஸ்பிலே போா்டு, எல்.இ.டி. டிவி, இணையதள இணைப்பு (வைஃபை) போன்ற அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எல்.இ.டி. டிவி மூலம் விளம்பரம் செய்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், அகசிப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவா் நாராயணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசு துரைராஜ், நகரத் தலைவா் வின்சென்ட், சேவாதளம் நாகராஜ், லலித் ஆண்டனி, பொதுமக்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம் (16கேஜிபி2):

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே நவீன பயணியா் நிழற்கூடத்தைத் திறந்துவைக்கும் அ.செல்லகுமாா் எம்.பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.