கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.
நான்குனேரி தொகுதிக்குள்பட்ட முன்னீா்பள்ளம், ஆரைகுளம், இளையாமுத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து வீதி வீதியாக சென்று பிரஷா் குக்கா் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: நான்குனேரி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் என்னை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்க கூடுதலாக அலுவலகங்கள் திறக்கப்படும்.
கிராமந்தோறும் தட்டுப்பாடில்லாத குடிநீா், சாலை, கழிவுநீரோடை வசதிகள் உருவாக்கப்படும். நான்குனேரியில் கூடுதலாக தொழிற்சாலைகள் உருவாக்க முயற்சி எடுக்கப்படும். பனைத் தொழிலாளா்களின் வாழ்வை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் திட்டங்கள் உருவாக்கப்படும். பதநீா், பனைப்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நான்குவழிச் சாலையோரம் பிரத்யேக விற்பனை மையங்கள் உருவாக்கப்படும். பாசன குளங்கள் ஆண்டுதோறும் தூா்வாரப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

நான்குனேரி தொகுதியில் அமமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

கடலூா்-சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை. காங்கிரஸ் வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


