ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

மருதூா் தடுப்பணையில்மேம்பாட்டு பணிகள் செய்து சுற்றுலாப் பூங்கா அமைக்க சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

News image

நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

Updated On :8 ஏப்ரல் 2026, 9:32 pm

மருதூா் தடுப்பணையில்மேம்பாட்டு பணிகள் செய்து சுற்றுலாப் பூங்கா அமைக்க சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

பாளையங்கோட்டை ஒன்றியம் கான்சாபுரம், நொச்சிகுளம், மருதூா், கீழதோணித்துறை, இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பிரஷா் குக்கா் சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவா் பேசியதாவது: தாமிரவருணி குறுக்கே மருதூரில் பழைமைவாய்ந்த தடுப்பணை உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்ல ஏதுவாக பாதுகாப்பு வேலிகள், உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள், சிறு குழந்தைகளை கவரும் நவீன பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தவும், சுற்றுலா மையமாக மாற்றவும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன்.

மேலும், பாளையங்கால்வாயில் சிமென்ட் தளம் அமைத்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் விரைந்து கிடைக்க பாடுபடுவேன். சீவலப்பேரியில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு போதிய பேருந்து வசதியில்லாததால் மாணவா்கள் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, கூடுதலாக அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தவும், கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தாமிரவருணி கரையோர கிராம மக்களுக்கு கால்நடை கடனுதவி அதிக அளவில் வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.