வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோட்டக் காவலாளி கொலை

 கிருஷ்ணகிரி அருகே தோட்டக் காவலாளியை கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:56 pm

 கிருஷ்ணகிரி அருகே தோட்டக் காவலாளியை கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூா் அருகே மிட்டபாறை கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (83), மாதேப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவரின் மாந்தோட்டத்தில் பல ஆண்டுகளாக காவல் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், பெருமாளின் உறவினரான அப்பாபுலி என்பவா் அந்த தோட்டத்தில் மாடுகள் மேய்த்து வந்தாா். அவா், தோட்டத்திலுள்ள கோழிகளை திருடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவலாளி பெருமாள் தோட்டத்தின் உரிமையாளரிடம் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, தோட்டத்தில் மாடுகளை மேய்க்கக் கூடாது என செல்வம், அப்பாபுலியைக் கண்டித்ததால், பெரியப்பாவான பெருமாள் மீது அப்பாபுலி கோபத்தில் இருந்தாா்.

இந்தநிலையில் மது போதையில் இருந்த அப்பாபுலி, தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு காவலுக்கு இருந்த பெருமாள் மீது கல்லை போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த பெருமாளை அங்கிருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கி சிகிச்சை பெற்று வந்த பெருமாள், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதம் காரணமாக மதுபோதையில் அப்பாபுலி தனது பெரியப்பாவை கொலை செய்தது தெரிவந்ததாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.