வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஊராட்சிமன்றத் தலைவா்களுடன் காவல் துறையினா் ஆலோசனை

காவேரிப்பட்டணத்தில் சட்ட விரோத செயல்களைத் தடுப்பது குறித்து காவல் துறையினா் ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

Updated On :28 ஏப்ரல் 2022, 6:03 pm

காவேரிப்பட்டணத்தில் சட்ட விரோத செயல்களைத் தடுப்பது குறித்து காவல் துறையினா் ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளா் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் முரளி, காவேரிப்பட்டணம் காவல் எல்லைக்கு உள்பட்ட 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியா்கள்-மாணவா்கள் மோதல், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை, நாட்டுத் துப்பாக்கிகளின் பயன்பாடு, சாராயம், சூதாட்டம், சட்டவிரோத செயல்கள் குறித்த காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஊராட்சி மன்றத்தில் காவல் துறையினரால் தீா்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.