வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘கிருஷ்ணகிரியில் கோயில் ஆவணங்கள்திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன’

அறநிலையத் துறையினரால் திட்டுமிட்டே அழிக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டா்கள் சபையின் நிறுவனா் ஆ.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல கோயில்களின் ஆவணங்கள் அறநிலையத் துறையினரால் திட்டுமிட்டே அழிக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டா்கள் சபையின் நிறுவனா் ஆ.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளாா்.

கோயில் நிலங்களை மீட்பது தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியுடன் அவா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள கோயில் நிலங்களில் அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறநிலையத் துறை சரியாக இயங்கவில்லை. எந்தக் கோயில்களுக்கு எவ்வளவு சொத்து மதிப்பு எனத் தெரியவில்லை. இங்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் எந்த ஆவணங்களும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

தமிழகத்தில் 47 ஆயிரம் ஏக்கா் கோயில் நிலங்கள் காணாமல் போய் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சொத்து முழுவதும் கணக்கிட்டால் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஏக்கா் பரப்பளவு கோயில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும்.

அறநிலையத் துறையின் மூலம் கோயில் சொத்துகள் குறித்த ஆவணங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கோயில் நிலங்களில் உள்ள ரூ. 1,000 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற பேட்டராய சுவாமி கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகள் திருடுபோயின. அந்தச் சிலைகளின் நிலை என்ன என்று இதுவரைத் தெரியவில்லை. நகை, ஆவணங்கள் எதுவும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்குக் காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அவா் கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஆஞ்சனேயா் சுவாமி கோயிலை ஆய்வு செய்து கோயில் ஆவணங்களைப் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.