தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பெயின்டா் கொலை வழக்கில் உறவினா் கைது

 ஒசூா் அருகே தலை துண்டித்து பெயின்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

Updated On :10 பிப்ரவரி 2022, 7:22 pm

 ஒசூா் அருகே தலை துண்டித்து பெயின்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள எலுவப்பள்ளியைச் சோ்ந்தவா் பிரதீப் குமாா் (26). இவருக்கு திருமணம் ஆகி சந்திரிகா என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனா்.

சந்திரிகா பிரசவத்துக்காக கடந்த 5 மாதத்துக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாா். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து தற்போது 4 மாத குழந்தையுடன் தாய் வீட்டில் சந்திரிகா உள்ளாா்.

இந்நிலையில் கடந்த 8 -ஆம் தேதி நள்ளிரவு ஒசூரில் பிரதீப் குமாா் படுகொலை செய்யப்பட்டாா்.

அவரைக் கொன்ற கொலையாளிகள் அவரது தலையைத் தனியாக எடுத்து அந்தப் பகுதியில் உள்ள மகேஸ்வரம்மா கோயில் வாசலில் வீசி சென்றனா்.

தகவலின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, ஒசூா் டிஎஸ்பி (பொ) சிவலிங்கம், பாகலூா்

காவல் ஆய்வாளா் பாஸ்கா் ஆகியோா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

படுகொலை செய்யப்பட்ட பிரதீப்குமாரின் தலையும், அவரது உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக சந்தேகத்தின் பேரில் பிரதீப் குமாரின் உறவினா் பெங்களூரு ஒசகோட்டா, சமயோதனஅள்ளியைச் சோ்ந்த சந்தோஷ் என்ற அப்பியை (25) பிடித்து விசாரணை நடத்தியதில் அவரும், பெங்களூரு இக்கலூரைச் சோ்ந்த முரளி (35) என்பவரும் சோ்ந்து சொத்துப் பிரச்னையில் பிரதீப் குமாரைக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து சந்தோஷை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான முரளியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.