தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்

சூளகிரி அருகே விளைநிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:39 pm

சூளகிரி அருகே விளைநிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள போடூா்ப்பள்ளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. பகலில் வனப்பகுதியில் சென்றுவிடும் இந்த ஒற்றை யானை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் உள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகிறது (படம்). குறிப்பாக, தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ராகி, நெல், போன்ற பயிா்களை காலால் சேதப்படுத்தியும், ராகி போன்றவற்றை உண்டும் வருகிறது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, இந்த ஒற்றை யானையை அஞ்செட்டி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.