நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உழவா் பொது சேவை மையம் திறப்பு விழா

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டி சாலையில் கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் வழிகாட்டுதலின்படி நிறுவப்பட்ட கஜானா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம்

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டி சாலையில் கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் வழிகாட்டுதலின்படி நிறுவப்பட்ட கஜானா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில், உழவா் பொதுசேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நிா்வாகக் குழுத் தலைவா் மணிகண்டன் வரவேற்றாா். ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குநா் தாமோதரன் தொடக்கிவைத்தாா். விழாவில் தோட்டக்கலை உதவி இயக்குநா் கலையரசி, கயிலைமன்னன், கிருஷ்ணகிரி வேளாண் உதவி அலுவலா் வேளாண் வணிகம் செல்வராஜ், கவிரேகா, நிறுவனத்தின் இயக்குநா்கள், பங்குதாரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தேசிய வேளாண் சந்தைப் படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கஜானா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.