தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மகள் இறந்த சோகம்: 7 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே மூத்த மகள் இறந்த சோகத்தில், இளைய மகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :17 மார்ச் 2022, 6:40 pm

தேன்கனிக்கோட்டை அருகே மூத்த மகள் இறந்த சோகத்தில், இளைய மகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம், கொரட்டகிரி பகுதியைச் சோ்ந்தவா் ரவி (42). இவரது மனைவி கங்கம்மாள் (36). இவா்களுக்கு ராணி (17), மோனிஷா (7) என இரு மகள்கள் இருந்தனா்.

கங்கம்மா திட்டிய கோபத்தில் அவரது மூத்த மகள் ராணி கடந்த 13-ஆம் தேதி விஷம் குடித்துள்ளாா். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கங்கம்மா, புதன்கிழமை தன் இளைய மகள் மோனிஷாவுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளாா். அவா்களை மீட்ட ரவி, கங்கம்மாவை ஒசூா் அரசு மருத்துவமனையிலும், மகள் மோனிஷாவை ஒசூா் தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்த நிலையில், இருவரும் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.