பாலிவுட்டில் பத்தாண்டுகளை நிறைவு செய்த நடிகை சான்யா மல்ஹோத்ரா பிடிஐக்கு அளித்த நேர்காணலில், “வாய்ப்புகளுக்கு நன்றியுணர்வுடன் இருக்கிறேன்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
தில்லியைச் சேர்ந்த நடிகை சான்யா மல்ஹோத்ரா ’டேன்ஸ் இந்தியா டேன்ஸ்’ என்ற தொலைக்காட்சியில் நடனத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகையாக 2016ல் ஆமிர் கானின் தங்கல் படத்தில் அறிமுகமானார்.
பதாய் ஹோ, போட்டோகிராஃபி, சகுந்தலா தேவி, லூடோ, கதல், ஹிட், ஜவான், மிஸ்டர்ஸ், மீனாட்சி சுந்தரேஷ்வர் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தமிழில் தக் லைஃப் படத்தில் ஜிக்குச்சா என்ற பாடலுக்கு நடனமாடியிருப்பார்.
மலையாளத்தில் கவனம்பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சிறப்பாக நடித்திருந்தார். இவர் நடித்த கதல், ஜவான், சாம் பகதூர் படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சுந்தர் பூனம் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் ராவுடன் நடித்துள்ள ’டோஸ்டர்’ என்ற படம் நெட்பிளிக்ஸில் நேற்று (ஏப்.15) வெளியானது.
இந்த நிலையில், திரைத்துறையில் பத்தாண்டுகளை நிறைவு செய்தது குறித்து சான்யா மல்ஹோத்ரா பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பத்து ஆண்டுகள். நம்பவே முடியவில்லை. அற்புதமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
Summary
Grateful for the opportunities: Sanya Malhotra on completing a decade in Bollywood
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










