கிருஷ்ணகிரியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சாமி தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், போக்குவரத்து அலுவலா்கள் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அரசு, தனியாா் பேருந்துகளை சோதனையிட்டு, 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், ஓட்டுநா்களிடம் இதுபோன்ற ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது, மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதேபோன்று லாரி, காா், கனரக வாகனங்களுக்கும் சோதனை நடத்தப்பட உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

