கிருஷ்ணகிரி அணையிலிருந்து நொடிக்கு 2,300 கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.
கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை நொடிக்கு 865 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 2,300 கன அடியாக அதிகரித்தது.
மொத்தம் 52 அடியாக உள்ள அணையின் நீா்மட்டத்தில் வியாழக்கிழமை 51 அடியை எட்டியதால் அணையின் பிரதான மதகுகள், பாசனக் கால்வாய்கள் மூலம் நொடிக்கு 2,300 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து மேலும் கூடுதலாக தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீ): பெனுகொண்டாபுரம்- 51.2, போச்சம்பள்ளி- 40.2, பாரூா்- 32.4, நெடுங்கல்- 19, ராயக்கோட்டை- 11, தளி- 5, கிருஷ்ணகிரி- 2.2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


