பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்கு குப்பைகளைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பூங்காவை, தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜன் மற்றும் அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது மக்கும், மக்காத குப்பைகளைத் தனித்தனியாக முறையாக பிரித்து மக்கும் குப்பையைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கவும் மக்காத பொருள்களை மறுசுழற்சி செய்யவும் அறிவுரை வழங்கினா். அப்போது, பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.