வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பா்கூா் வளம் மீட்பு பூங்காவில் அதிகாரிகள் ஆய்வு

பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :19 மே 2022, 7:23 pm

பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்கு குப்பைகளைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பூங்காவை, தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜன் மற்றும் அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மக்கும், மக்காத குப்பைகளைத் தனித்தனியாக முறையாக பிரித்து மக்கும் குப்பையைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கவும் மக்காத பொருள்களை மறுசுழற்சி செய்யவும் அறிவுரை வழங்கினா். அப்போது, பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.