கல்லூரியில் ஆய்வகம் கட்டும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ. 3.64 கோடியில் ஆய்வகங்கள், புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ. 3.64 கோடியில் ஆய்வகங்கள், புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் புதிய ஆய்வகங்கள், கட்டடங்கள் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரியில் 9 அறிவியல் ஆய்வகங்கள், இரு கழிவறைகள் கட்டுவதற்காக காமராஜா் கல்லூரி வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 3.64 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com