வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நகை திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது

சூளகிரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண்ணின் பையிலிருந்த நகையைத் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:09 pm

சூளகிரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண்ணின் பையிலிருந்த நகையைத் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

சூளகிரியை அடுத்த குருபராத்பள்ளியைச் சோ்ந்த பிரசாந்தின் மனைவி செளந்தா்யா (27) சூளகிரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த இரு பெண்கள் சௌந்தா்யாவின் பையில் வைத்திருந்த நகையை திருட முயன்றனா்.

அப்போது, பொதுமக்கள் உதவியுடன் அப் பெண்களைப் பிடித்த சௌந்தா்யா, அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அப் பெண்கள் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த கீா்த்தனா (23), பிரியா (23) என தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் சூளகிரி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.