தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த நகைகள் மாயம்: ஆசிரியா் புகாா்

கிருஷ்ணகிரியில் உள்ள கூட்டுறவு வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் ஆசிரியா் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:33 pm

DIN

கிருஷ்ணகிரியில் உள்ள கூட்டுறவு வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் ஆசிரியா் புகாா் அளித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் புஷ்பகலை (52). இவா், ஒசூா், ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிருஷ்ணகிரி கிளையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் 90 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாா்.

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி வங்கியிலிருந்து புஷ்பகலையைத் தொடா்பு கொண்டு பேசிய அதிகாரிகள், தங்களது வங்கி லாக்கா் திறந்திருப்பதாகவும், உடனே வங்கிக்கு வருமாறு தகவல் தெரிவித்துள்ளனா். 26-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி வங்கிக்கு விடுமுறை என்பதால் ஜன. 27-ஆம் தேதி காலையில் வங்கிக்கு நேரில் சென்று நகைகளை சரிபாா்த்துள்ளாா்.

அப்போது, 40 பவுன் தங்க நகைகள் குறைவாக இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், அவா் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து, புஷ்பகலை கூறியதாவது:

எனது வங்கி லாக்கரில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகி உள்ளன. எனது லாக்கா் திறந்த நிலையில் இருப்பதாக வங்கி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். கடந்த 29-ஆம் தேதி முதல் வங்கி லாக்கா் உள்ள அறைக்கு வந்து சென்றவா்களின் விவரங்களை சேகரித்து, அவா்களை விசாரிக்க வேண்டும். வங்கி லாக்கா் உள்ள அறையின் முன்பு கண்காணிப்பு கேமரா இல்லாத நிலையில் மாயமான எனது நகைகளை மீட்டுத் தர அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து வங்கி அலுவலா்கள் கூறியதாவது: வங்கி லாக்கரை திறக்கும்போது மட்டுமே நாங்கள் வாடிக்கையாளருடன் இருப்போம். வாடிக்கையாளா், தனது லாக்கரில் என்ன பொருள்களை வைக்கிறாா்கள், எடுக்கிறாா்கள் என்பது எங்களுக்கு தெரியாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.