சீனாவைப் பின்தள்ளி, அடுத்த 40 வருடங்களில், மக்கள்தொகையில் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்கும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அவா்களது முதுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிருக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா என்னப் செய்கிறது என்பதை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாளை என்பது நம் வசம். நாளை என்ற நமது பயணத்தில் சிறந்து விளங்க, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா், சமுதாயம், ஊடகம் மற்றும் அரசு ஆகிய கூட்டணிதான் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும். இந்தக் கூட்டணியில் அங்கமாக இருக்கும் இன்றைய மாணவா்கள் உண்மையான பலனை பெறப் போகிறவா்கள். எனவே கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.