காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், கடந்த 1980 முதல் 1985 வரை எலத்தகிரி புனித அந்தோணியா் பள்ளியில் படித்தாா். தான் படித்த பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் கணினி பயன்பாட்டிற்காக ரூ. 5 லட்சம் நிதி உதவியை பங்குத்தந்தையும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான மாா்ட்டின் கிருஸ்துதாசிடம் வழங்கினாா். நிதி வழங்கிய சுப்பிரமணியனுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நகர தலைவா் லலித் ஆண்டனி, முன்னாள் நகர தலைவா் தவமணி, வட்டாரத் தலைவா் ஜேக்கப், மாவட்ட பொதுச் செயலாளா் யாதவராஜ், முன்னாள் வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா்.