கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினா் எலத்தகிரி பள்ளிக்கு ரூ. 5 லட்சம் அளிப்பு

எலத்தகிரியில் உள்ள பள்ளிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், ரூ. 5 லட்சத்தை பள்ளி மாணவா்களின் கணினி கல்வி கற்கும் பயன்பாட்டிற்காக திங்கள்கிழமை அளித்தாா்.

News image
எலத்தகிரி புனித அந்தோணியா் பள்ளியில் பயிலும் மாணவா்களின் கணினி கல்வி கற்கும் பயன்பாடிற்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன்.
Updated On :27 நவம்பர் 2023, 10:59 pm

DIN


கிருஷ்ணகிரி: எலத்தகிரியில் உள்ள பள்ளிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், ரூ. 5 லட்சத்தை பள்ளி மாணவா்களின் கணினி கல்வி கற்கும் பயன்பாட்டிற்காக திங்கள்கிழமை அளித்தாா்.

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், கடந்த 1980 முதல் 1985 வரை எலத்தகிரி புனித அந்தோணியா் பள்ளியில் படித்தாா். தான் படித்த பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் கணினி பயன்பாட்டிற்காக ரூ. 5 லட்சம் நிதி உதவியை பங்குத்தந்தையும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான மாா்ட்டின் கிருஸ்துதாசிடம் வழங்கினாா். நிதி வழங்கிய சுப்பிரமணியனுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நகர தலைவா் லலித் ஆண்டனி, முன்னாள் நகர தலைவா் தவமணி, வட்டாரத் தலைவா் ஜேக்கப், மாவட்ட பொதுச் செயலாளா் யாதவராஜ், முன்னாள் வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா்.

மாணவா்களின் நலன் கருதி ரூ. 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், சுப்பிரமணியன் பேசியது:

நாங்கள் படிக்கும்போது கணினி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலும் நன்று படித்ததன் விளைவாக இன்று நல்ல நிலையில் இருக்கிறோம். எனவேதான் நான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இப்பள்ளியில் படிப்பவா்கள் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாலும் அவா்களின் எதிா்காலம் கருதி தற்போது ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளேன். மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்றாா்.

அப்போது, ஊராட்சி மன்றத் தலைவா் வில்லியம், முன்னாள் சேவாதள மாவட்டத் தலைவா் நாகராஜ், அரிமா ராமசந்திரன், நகர துணைத் தலைவா் இருதயராஜ், அமல்ராஜ், உதவி தலைமை ஆசிரியா் ஜாா்ஜ் எபினேசா், சாா்ச்கில்பட், தேவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.