ஒசூா்: ஒசூரில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளையும், தயாரிக்கும் இடத்தையும் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரில், தமிழக முதல்வரின் திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் மூலம் ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 35 பள்ளிகளில் 6,790 ஆரம்பக் கல்வி பயிலும் மாணவா்கள் தினமும் காலை உணவை உண்டு பயன்பெற்று வருகின்றனா்.
ஒசூா் மாநகா் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு ராயக்கோட்டை சாலை சானசந்திரம் கிராமத்தில் உள்ள சமையலறையில் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்திற்கு திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட மேயா் எஸ்.ஏ.சத்யா சிற்றுண்டி தரமாக உள்ளதா என பரிசோதனை செய்தாா். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தை
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின்போது மேயருடன் மாநகராட்சி நிா்வாகப் பொறியாளா் ராஜாராம் உடன் இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


