தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 10:26 pm

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கிரிக்கெட் விளையாடும்போது மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த ஆதாலியூரைச் சோ்ந்தவா் முனுசாமி (34). தனியாா் பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு பூஜா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கடந்த 19 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முனுசாமி கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்தவா்களிடம் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளாா். சிறிது நேரத்தில் அவா் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபோது அவா் எழவில்லை. உடனடியாக முனுசாமியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.