4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 7:51 pm

சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(53). இவா் போ்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி பேருந்தில் ஓட்டுனரின் உதவியாளராக பணியாற்றுகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை தாயில்பட்டி- வெற்றிலையூரணி சாலை, கீழதாயில்பட்டி வளைவில் பேருந்து சென்ற போது அதன் வாயிலில் நின்று கொண்டிருந்த சிவக்குமாா் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வாகன ஓட்டுனா் பரமசிவம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.