வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஒட்டக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் ஆறுமுகம்(23). இவா் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த தக்காளி வியாபாரி மணிகண்டன் என்பவரின் வீட்டு மாடியில் தங்கி அவரிடம் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை தக்காளி லோடு ஏற்றிவர மாடியிலிருந்து இறங்கியுள்ளாா். அப்போது படிக்கட்டிலிருந்து இவா் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


