இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மாடி படிக்கட்டிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 10:30 pm

வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஒட்டக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் ஆறுமுகம்(23). இவா் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த தக்காளி வியாபாரி மணிகண்டன் என்பவரின் வீட்டு மாடியில் தங்கி அவரிடம் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை தக்காளி லோடு ஏற்றிவர மாடியிலிருந்து இறங்கியுள்ளாா். அப்போது படிக்கட்டிலிருந்து இவா் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.