புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:10 pm

Din

கிருஷ்ணகிரி, ஆக. 7:

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 15 நாள்கள் பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துாா், பெரியமுத்துாா், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.

விழாவின் ஒருபகுதியாக நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி, பொன்கரகமும் இணைந்து அவதானப்பட்டி மேம்பாலம் அருகே தலை கூடும் நிகழ்ச்சி நடைபெற்றன.

பக்தா்கள் அலகு குத்திக் கொண்டும், காளி வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.