கமுதி அருகே சக்தி மாரியம்மன் கோயில் 26-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடியை கிராம மக்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். பின்னா், கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டு, மூலவா் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பொதுமக்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 6-ஆம் கோயில் முன் திருவிளக்கு பூஜையும், 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அக்னிச்சட்டி எடுத்தல், சேத்தாண்டி வேஷமிட்டு நோ்த்திக் கடன் செலுத்துதல், 8-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், மாலையில் முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோரைப்பள்ளம் மாரியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

துளுக்காணி அம்மன் கோயில் திருவிழா: பால்குடம் ஊா்வலம்

புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திருவிழா கொடியேற்றம்

செப்புத்தேரில் காந்திமதியம்மன் வீதியுலா
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



