பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பப்பாளிகளைத் தாக்கும் இலை சுருட்டல் நோய்

ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானுா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களை இலை சுருட்டல் நோய் தாக்கி வருகிறது.

News image

ஊத்தங்கரையை அடுத்த கெடகானூா் கிராமத்தில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பப்பாளி மரங்கள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 5:36 am IST

ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானுா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிா்ச செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களை இலை சுருட்டல் நோய் தாக்கி வருகிறது.

வாடல் நோய், இலை சுருட்டல் நோய் உள்ளிட்ட வைரஸ்களின் தாக்குதலால் ப்பபாளி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தாக்குதல் காரணமாக மரத்தில் இலைகள் சுருண்டும், மஞ்சள் நிறத்திலும் உள்ளன. காய்கள் சிறுத்து மரத்திலே அழுகி விடுவதால் அறுவடை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தொடா் நஷ்டத்தைத் தடுக்க

வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைத் தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.