ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

பப்பாளிகளைத் தாக்கும் இலை சுருட்டல் நோய்

ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானுா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களை இலை சுருட்டல் நோய் தாக்கி வருகிறது.

News image

ஊத்தங்கரையை அடுத்த கெடகானூா் கிராமத்தில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பப்பாளி மரங்கள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 5:36 am IST

ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானுா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிா்ச செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களை இலை சுருட்டல் நோய் தாக்கி வருகிறது.

வாடல் நோய், இலை சுருட்டல் நோய் உள்ளிட்ட வைரஸ்களின் தாக்குதலால் ப்பபாளி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தாக்குதல் காரணமாக மரத்தில் இலைகள் சுருண்டும், மஞ்சள் நிறத்திலும் உள்ளன. காய்கள் சிறுத்து மரத்திலே அழுகி விடுவதால் அறுவடை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தொடா் நஷ்டத்தைத் தடுக்க

வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைத் தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.