ஊத்தங்கரையை அடுத்த கெடகானூா் கிராமத்தில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பப்பாளி மரங்கள்.
கிருஷ்ணகிரி
பப்பாளிகளைத் தாக்கும் இலை சுருட்டல் நோய்
ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானுா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களை இலை சுருட்டல் நோய் தாக்கி வருகிறது.
ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானுா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிா்ச செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களை இலை சுருட்டல் நோய் தாக்கி வருகிறது.
வாடல் நோய், இலை சுருட்டல் நோய் உள்ளிட்ட வைரஸ்களின் தாக்குதலால் ப்பபாளி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தாக்குதல் காரணமாக மரத்தில் இலைகள் சுருண்டும், மஞ்சள் நிறத்திலும் உள்ளன. காய்கள் சிறுத்து மரத்திலே அழுகி விடுவதால் அறுவடை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தொடா் நஷ்டத்தைத் தடுக்க
வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைத் தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

