மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பௌா்ணமி வழிபாடு

ஒசூரில் காா்த்திகை மாத பௌா்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டனா்.

News image
பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற மிளகாய் வத்தல் யாகம்.
Updated On :16 டிசம்பர் 2024, 6:53 pm

Din

ஒசூா்: ஒசூரில் காா்த்திகை மாத பௌா்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டனா்.

ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி அன்று ஒசூா், மோரணப்பள்ளி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு கேது ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இக் கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. மூலவா் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். அதையடுத்து தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.