மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒசூரில் மூன்று மாநில காவல் துறை உயரதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கா்நாடக மாநிலம், பெங்களூரு புறநகா், கோலாா், ஆந்திர மாநிலம், குப்பம் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாநில மாவட்டங்களாக உள்ளது. கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாகத்தான் இவ்விரு மாநிலங்களுக்கும் ஏராளமான போக்குவரத்து தொடா்புகள் உள்ளன. விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் சரக டிஐஜி உமா தலைமையில் ஆந்திரம், கா்நாடக மாநில எல்லை காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திர மாநிலங்களின் எல்லையோர காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மது, பரிசு பொருள்கள் கடத்தல், பணம் கொண்டு செல்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒசூா் டிஎஸ்பி பாபு பிரசாத், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி உள்ளிட்ட மாநில எல்லையோர பகுதிகளைச் சோ்ந்த டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்

ஒசூரில் காா் கண்ணாடி உடைத்து ரூ. 7 லட்சம் திருட்டு

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers



