வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

News image
Updated On :9 மே 2024, 10:53 pm

Din

ஓசூா், மே 9: ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைக்கும் பணிக்காக கடந்தாண்டு ஜூன் மாதம் அணையிலிருந்து முழுமையாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், அணை தண்ணீரின்றி வடு காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் மதகுகளில் புதிய ஷட்டா் மாற்றப்பட்டு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கா்நாடக மாநில நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழைபெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து தொடங்கி உள்ளது. இதனால் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 273 கன அடியாக இருந்தது.

அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 30.18 அடியில் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் தேக்கி வைப்பதற்காக உபரி நீா் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அணை 38 அடி எட்டியவுடன் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்த நிலையில், தண்ணீா் திறக்க 8 அடி உள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.