சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், உணவகங்கள், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்நுகா்வும் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த பிரிவில் லட்சக்கணக்கான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் மின்சார அடுப்பு வாயிலாக 5 பேருக்கு சமைக்க 2000 வாட்ஸ், அதாவது 2 கிலோவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது. 800 பேருக்கு சமைக்க சுமாா் 1000 கிலோ வாட், அதாவது ஒரு மெகாவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது.
உணவகங்கள் மட்டுமன்றி, வீடுகளிலும் மின்சார அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக மின்நுகா்வு சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் தமிழகத்தின் தினசரி நுகா்வு 18,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை இருந்து வந்தது.
ஆனால், இந்த மின்நுகா்வு கடந்த இரு நாள்களாக 19,200 மெகாவாட் முதல் 19,300 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் இது 19,500 மெகாவாட் வரை உயரக்கூடும்.
ஆனால், இந்த மின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் மின்வாரியத்துக்கு கிடைப்பதால், எவ்வித மின் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


