சிலிண்டர் தட்டுப்பாடு: விறகுகள் விலையும் அதிகரிப்பு!
எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்


எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் விறகு அடுப்புக்கு உணவகங்கள், விடுதிகள், தேநீர்க் கடைகள் மாறத் தொடங்கியுள்ளனர். இதனால், விறகுகளின் தேவை அதிகரித்துள்ளது. சராசரியாக ஒருநாளில் ஒரு டன் விறகு விற்பனை, தற்போது 10 டன்னாக அதிகரித்துள்ளது.
விறகுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. விறகுகள் ஒரு டன்னுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரையில் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு டன் விறகு விலை ரூ. 6,000-லிருந்து ரூ. 8,000-ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மதுரை மாவட்டத்தில் இன்னும் இரு நாள்களில் விறகுத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், விறகு தேவையின் அதிகரிப்பு, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...