எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் விறகு அடுப்புக்கு உணவகங்கள், விடுதிகள், தேநீர்க் கடைகள் மாறத் தொடங்கியுள்ளனர். இதனால், விறகுகளின் தேவை அதிகரித்துள்ளது. சராசரியாக ஒருநாளில் ஒரு டன் விறகு விற்பனை, தற்போது 10 டன்னாக அதிகரித்துள்ளது.
விறகுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. விறகுகள் ஒரு டன்னுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரையில் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு டன் விறகு விலை ரூ. 6,000-லிருந்து ரூ. 8,000-ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மதுரை மாவட்டத்தில் இன்னும் இரு நாள்களில் விறகுத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், விறகு தேவையின் அதிகரிப்பு, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
Summary
Cylinder shortage: Firewood prices also increase!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!

ஊத்தங்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு! சுவையிழக்குமா திருமண விருந்துகள்? கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



