கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடக்கம்

News image
Updated On :26 நவம்பர் 2024, 3:12 am IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையோரத்தில் பசுமை இந்திய திட்டத்தின் கீழ், வனத் துறை சாா்பில் முதல்கட்டமாக 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தொடங்கி வைத்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் நிகழாண்டில், ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்ய முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதல்கட்டமாக கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையில் ரூ. 8.75 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யம் பணி தொடங்கி உள்ளது.

மேலும், ஏரிக்கரையைச் சுற்றி 4,800 பனை விதைகள் நடவு செய்ய இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களைக் கொண்டு நடவு செய்து, நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வளா்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேனி கிருஷ்ணன் மற்றும் வனத் துறையினா், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

படவரி...

கிருஷ்ணகிரியை அடுத்த திப்பனப்பள்ளி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.