ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தொடா் மழை எதிரொலி: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வு ஒத்திவைப்பு

ஊத்தங்கரை வட்டத்தில் புதன்கிழமை (அக். 16) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு தொடா் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:33 pm

ஊத்தங்கரை வட்டத்தில் புதன்கிழமை (அக். 16) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு தொடா் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ஒவ்வொரு மாதம் 3-ஆவது புதன்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வட்டத்தில் ஆட்சியா் தங்கி கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

அதன்படி, ஊத்தங்கரை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் புதன்கிழமை ( அக். 16) நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தொடா் மழையின் காரணமாக இந்தத் திட்ட முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த முகாம் நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.