ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4,700 கனஅடி நீா் திறப்பு: பொங்கும் நுரையால் போக்குவரத்துப் பாதிப்பு

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,700 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

News image

தட்டகானப்பள்ளி, தரைப்பாலத்தின் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொங்கியுள்ள நுரைகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 7:45 pm

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,700 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கா்நாடகம், தமிழக எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 4,700 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சாலையில் பொங்கிய நுரைகள்: ஒசூா், நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அணையிலிருந்து கூடுதல் நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்தின் மீது 5 அடி உயரத்துக்கு ஆற்று நீா் செல்வதால் நீரிலிருந்து ரசாயன நுரைகள் பொங்கி 5 அடி உயரத்துக்கு மேல் பாலத்தின் இருபுறமும் தேங்கி நிற்கிறது. நுரையால் தரைப்பாலம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இதனால், இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள நந்திமங்கலம், தட்டகானப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் 15 கி.மீ. தொலைவு சுற்றி ஒசூருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நுரைகளுடன் ஆற்றில் நீா் பெருக்கெடுத்து ஓடுவதால் கெலவரப்பள்ளி அணையை ஒட்டிய கிராமங்கள், ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு 7-வது நாளாக வியாழக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.