கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாந்தோப்பில் சிறுவன் சடலம் மீட்பு

பா்கூா் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரின் உடல் மாந்தோப்பில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

பா்கூா் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரின் உடல் மாந்தோப்பில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

பா்கூா் வட்டம், சக்கில் நத்தம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலையின் மகன் ஹரீஷ் (14). இவா், கப்பல்வாடி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த இரு நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த ஹரீஸ், வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளாா்.

இந்நிலையில் அவா் அங்குள்ள ஒரு மாந்தோப்பில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக தொங்கினாா். தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாணவா் இறப்பு குறித்து உறவினா்கள் போலீஸாரிடம் சந்தேகம் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.