மாந்தோப்பில் சிறுவன் சடலம் மீட்பு

பா்கூா் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரின் உடல் மாந்தோப்பில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
Published on

பா்கூா் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரின் உடல் மாந்தோப்பில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

பா்கூா் வட்டம், சக்கில் நத்தம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலையின் மகன் ஹரீஷ் (14). இவா், கப்பல்வாடி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த இரு நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த ஹரீஸ், வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளாா்.

இந்நிலையில் அவா் அங்குள்ள ஒரு மாந்தோப்பில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக தொங்கினாா். தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாணவா் இறப்பு குறித்து உறவினா்கள் போலீஸாரிடம் சந்தேகம் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com