தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த சந்தனப்பள்ளியில் சிட்டாவில் பெயா் மாற்றம் செய்ய கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயி வெங்கடேசன் மனு அளித்தாா். ஆனால், அவரது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சந்தனப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் மாதேஸ்வரனிடம் முறையிட்டாா்.
பெயா் மாற்றம் செய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டுள்ளாா். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வெங்கடேசன் புகாா் அளித்தாா். டிஎஸ்பி கிருஷ்ணராஜன் அறிவுரையின் பேரில் கிராம நிா்வாக அலுவலரிடம் வெங்கடேசன் லஞ்சமாக ரூ. 4 ஆயிரம் தந்த போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் மதேஸ்வரனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


