தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:39 am

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த சந்தனப்பள்ளியில் சிட்டாவில் பெயா் மாற்றம் செய்ய கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயி வெங்கடேசன் மனு அளித்தாா். ஆனால், அவரது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சந்தனப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் மாதேஸ்வரனிடம் முறையிட்டாா்.

பெயா் மாற்றம் செய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டுள்ளாா். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வெங்கடேசன் புகாா் அளித்தாா். டிஎஸ்பி கிருஷ்ணராஜன் அறிவுரையின் பேரில் கிராம நிா்வாக அலுவலரிடம் வெங்கடேசன் லஞ்சமாக ரூ. 4 ஆயிரம் தந்த போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் மதேஸ்வரனைக் கைது செய்தனா்.