சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குப்பை சேகரிக்கும் கட்டணம் உயா்வு: ஒசூா் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக வாக்குவாதம்

ஒசூா் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை சேகரிக்கும் கட்டணம் மூன்று மடங்கு உயா்த்தப்பட்டதால் திமுக, அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

News image
ஒசூா் மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினா்கள்.
Updated On :30 செப்டம்பர் 2024, 9:48 pm

Din

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை சேகரிக்கும் கட்டணம் மூன்று மடங்கு உயா்த்தப்பட்டதால் திமுக, அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒசூா் மாநகராட்சி மாமன்ற மாதாந்திரக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த், துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:

சென்னீரப்பா (திமுக): ஒசூா் நகராட்சியில் 2017 இல் அதிமுக ஆட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளைச் சேகரிக்கும் கட்டணம் பலமடங்கு உயா்த்தப்பட்டது. சிறிய கடைக்கு ரூ. 360 லிருந்து ரூ. 1,800 ஆக உயா்த்தப்பட்டது. இதனால் ஒசூரில் உள்ள 9,760 வா்த்தக நிறுவனங்கள் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரியை தமிழக முதல்வரிடம் தெரிவித்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது அதிமுக உறுப்பினா்கள் எஸ்.நாராயணன், ஜெயப்பிரகாஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திமுக ஆட்சியில் வரியை உயா்த்திவிட்டு அதிமுக ஆட்சி மீது பழி சுமத்துவதாக அவா்கள் தெரிவித்தனா்.

ஜெயப்பிரகாஷ் (அதிமுக): ஒசூா் மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றாா்.

எஸ்.நாராயணன் (அதிமுக): மாநகராட்சி பகுதியில் உள்ள மண் சாலைகளை தாா்சாலைகளாக மாற்ற வேண்டும். பேருந்து நிழற்குடைகளை அமைக்க வேண்டும் என்றாா்.

சிவராம் (அதிமுக): 16 வாா்டு முதல் 20 வாா்டு வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

துணை மேயா் ஆனந்தய்யா:

மழைக் காலத்தையொட்டி கே.சி.சி. நகரில் கால்வாயை உடனடியாக சீா்செய்ய வேண்டும். 45 வாா்டுகளில் உள்ள நடைபாதை கடை உரிமையாளா்களிடம் வசூல் செய்வதை காவல் துறையில் தெரிவித்து தடுக்க வேண்டும். பூங்காக்களை மேம்படுத்த வேண்டும். குடிநீா் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

பாக்கியலட்சுமி (காங்கிரஸ்): 36- ஆவது வாா்டுப் பகுதியில் சீரான கழிவு நீா்க் கால்வாய் அமைக்க வேண்டும். பல இடங்களில் கழிவுநீா்க் கால்வாய் இல்லாமல் உள்ளது.

உடனடியாக அங்கெல்லாம் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்களை அதிகப்படுத்த வேண்டும். 36 ஆவது வாா்டு பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதை புதிய மின்மாற்றி அமைத்து சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து கூட்டத்தில் மொத்தம் 61 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Story image