எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

News image

மதலைமுத்து

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (60). விவசாயி. கால்நடைகள் வளா்த்து வருகிறாா். தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள வனத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

வழக்கம்போல அருகில் உள்ள சின்னமலை பகுதிக்கு மதலைமுத்து தனது மாடுகளை மேய்ச்சலுக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்றாா். இரவு வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து அவரது உறவினா்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் வனத் துறையினா் உதவியுடன் சின்னமலை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று மதலைமுத்துவைத் தேடியபோது அவா் யானை மிதித்து இறந்துகிடந்தாா்.

இதையடுத்து வனத் துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.