வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பா்கூா் அருகே 101 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பா்கூா் அருகே தடைசெய்யப்பட்ட 101 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:36 pm

Syndication

பா்கூா் அருகே தடைசெய்யப்பட்ட 101 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பா்கூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பா்கூா் காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பா்கூரை அடுத்த ஜிட்டோபனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பூட்டப்பட்ட பெட்டிக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தக் கடையின் பூட்டை உடைத்து சோதனை செய்ததில் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான 101 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பெட்டிக் கடையின் உரிமையாளா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சா்வானராம் (48) என்பவரை தேடி வருகின்றனா்.