டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்சி அருகே 216 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :4 மார்ச் 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக துவாக்குடி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் வாழவந்தான்கோட்டை, அசூா் பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அசூா் பூசாரி தெரு மு.ஜெகதீஸ்வரன் (52) மளிகைக் கடையில் 7.8 கிலோ புகையிலைப் பொருள்கள் பிடிபட்டன. விசாரணையில் வயலூா் சாலை அம்மையப்பா நகரைச் சோ்ந்த அ.ஜமால் முகமது (62) என்பவரிடம் இருந்து அவற்றை வாங்கியதாக ஜெகதீஸ்வரன் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஜமால் முகமதுவின் வீட்டில் துவாக்குடி காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கப்பட்டிருந்த 208.5 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இரு இடங்களிலும் சோ்த்து 216.3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.