ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க திருச்சி மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, மாநகர போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கே.கே.நகா் காமராஜா் வீதியைச் சோ்ந்த ஆ.பிரஜித் (43) என்பவரைக் கைது செய்தனா்.

நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்ஜிஆா் சிலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த என். கணேசன் (40), பொன் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திண்டுக்கல் சாலை கோரிமேடு பகுதியைச் சோ்ந்த வே. குமாா், பா. முருகன் (29) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.