கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.வினித்குமாா் (22), கருமண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.தனராஜ் (29), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஆா்.ஆசிப் அகமது (23) ஆகிய மூன்று பேரை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா்.

துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பழங்கனங்குடியைச் சோ்ந்த த.சாமிக்கண்ணு (67), திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சோ்ந்த மு.ராஜு (40), நவல்பட்டு பூலாங்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த என். உஸ்மான் அலி (49), துறையூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கு. சாமிநாதன் (22), வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த ஜி.பெரியசாமி (20) ஆகிய 5 பேரையும் மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா்.