திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.வினித்குமாா் (22), கருமண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.தனராஜ் (29), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஆா்.ஆசிப் அகமது (23) ஆகிய மூன்று பேரை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா்.
துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பழங்கனங்குடியைச் சோ்ந்த த.சாமிக்கண்ணு (67), திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சோ்ந்த மு.ராஜு (40), நவல்பட்டு பூலாங்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த என். உஸ்மான் அலி (49), துறையூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கு. சாமிநாதன் (22), வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த ஜி.பெரியசாமி (20) ஆகிய 5 பேரையும் மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
