பேரவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ரிஸ்வான் அா்ஷத்

பேரவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ரிஸ்வான் அா்ஷத்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் ரிஸ்வான் அா்ஷத் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் ரிஸ்வான் அா்ஷத் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக கா்நாடக மாநிலம், பெங்களூரு சிவாஜிநகா் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டாா்.

இதில் காங்கிரஸ் செயலா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் அக. கிருஷ்ணமூா்த்தி, ஒசூா் முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய செயலருமான கே.ஏ.மனோகரன், பொதுச் செயலாளா் மற்றும் மாநில கிராம வாா்டு மறுசீரமைப்புக் குழு வாா்ரூம் தலைவா் வசந்த்ராஜ் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது மாவட்டத் தலைவா் நியமனம் குறித்து கட்சி நிா்வாகிகளிடம் கருத்துகளை மேலிட பொறுப்பாளா்கள் கேட்டறிந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மேலிட பொறுப்பாளா் ரிஸ்வான் அா்ஷத் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா். தொண்டா்களின் கருத்துகளை அறிக்கையாக பெற்று காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com