கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரியில் பனைமரத்தை சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவியா், விவசாயிகளுக்கு சனிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.
கல்லூரி முதல்வா் சாந்தி முன்னிலையில், வேளாண் இளமறிவியல் நான்காம் ஆண்டு மாணவியா், பனைமரத்தில் துளையிட்டு சேதப்படுத்தும் காண்டமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில், ‘வேப்பங்கொட்டை புண்ணாக்குடன் மணல்கலவை (1:2 விகிதம்) குறுத்துப் பகுதியில் இடலாம். ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் பொறிகளை வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள் மூலமும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம், என்றனா்.
மேலும், இதுகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனா். இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக சாக்லேட் தின போட்டி: ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரி வெற்றி

காா் மோதி கல்லூரி மாணவிகள் காயம்

அசல் சான்று கோரிய மாணவிகள்: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு

அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



