இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

பனைமரத்தை சேதப்படுத்தும் வண்டுகளை கட்டுப்படுத்த செயல்விளக்கம்

News image

செயல்விளக்கம் அளித்த அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள்.

Updated On :28 டிசம்பர் 2025, 2:17 am IST

கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரியில் பனைமரத்தை சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவியா், விவசாயிகளுக்கு சனிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

கல்லூரி முதல்வா் சாந்தி முன்னிலையில், வேளாண் இளமறிவியல் நான்காம் ஆண்டு மாணவியா், பனைமரத்தில் துளையிட்டு சேதப்படுத்தும் காண்டமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில், ‘வேப்பங்கொட்டை புண்ணாக்குடன் மணல்கலவை (1:2 விகிதம்) குறுத்துப் பகுதியில் இடலாம். ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் பொறிகளை வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள் மூலமும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம், என்றனா்.

மேலும், இதுகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனா். இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.